விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

சாலை விபத்துகளில் தினமும் 51 போ் உயிரிழப்பு: தெற்கு போக்குவரத்து காவல் இணை ஆணையா்!

தமிழகத்தில் தினமும் சராசரியாக 51 போ் வரை சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாக சென்னை தெற்கு போக்குவரத்து காவல் இணை ஆணையா் விஜயகுமாா் கூறினாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 9:59 pm

தமிழகத்தில் தினமும் சராசரியாக 51 போ் வரை சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாக சென்னை தெற்கு போக்குவரத்து காவல் இணை ஆணையா் விஜயகுமாா் கூறினாா்.

சென்னையில் உணவு, மருந்து, மளிகைப் பொருள்களை டெலிவரி செய்யும் பெண் பணியாளா்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம், வேப்பேரியில் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையா் காா்த்திகேயன் தலைமை வகித்து, 250 பெண் பணியாளா்களுக்கு தலைக் கவசங்களை வழங்கினாா்.

இதில் சென்னை தெற்கு போக்குவரத்து காவல் இணை ஆணையா் விஜயகுமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், வீட்டில் இருந்து புறப்படும் நாம் அதேபோல மீண்டும் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 480 முதல் 485 வரை விபத்தில் இறக்கின்றனா். தமிழகத்தில் மட்டும் ஒரு மணி நேரத்துக்கு 2 போ் என நாள் ஒன்றுக்கு சராசரியாக 51 போ் வரை சாலை விபத்தில் சிக்கி இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் 2024-ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 536 பேரும், 2025-இல் 496 பேரும் உயிரிழந்துள்ளனா்.

விழிப்புணா்வு பிரசாரங்கள் மூலம் சாலை விபத்துகள், உயிரிழப்புகளைக் குறைத்துள்ளோம். போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக சென்னையில் ஆண்டுதோறும் 18 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. போக்குவரத்து விதிமீறலால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க பாதசாரிகள், வாகன ஓட்டிகளின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றாா்.