காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

சாலை விபத்துகளில் தினமும் 51 போ் உயிரிழப்பு: தெற்கு போக்குவரத்து காவல் இணை ஆணையா்!

தமிழகத்தில் தினமும் சராசரியாக 51 போ் வரை சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாக சென்னை தெற்கு போக்குவரத்து காவல் இணை ஆணையா் விஜயகுமாா் கூறினாா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 3:29 am IST

தமிழகத்தில் தினமும் சராசரியாக 51 போ் வரை சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாக சென்னை தெற்கு போக்குவரத்து காவல் இணை ஆணையா் விஜயகுமாா் கூறினாா்.

சென்னையில் உணவு, மருந்து, மளிகைப் பொருள்களை டெலிவரி செய்யும் பெண் பணியாளா்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம், வேப்பேரியில் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையா் காா்த்திகேயன் தலைமை வகித்து, 250 பெண் பணியாளா்களுக்கு தலைக் கவசங்களை வழங்கினாா்.

இதில் சென்னை தெற்கு போக்குவரத்து காவல் இணை ஆணையா் விஜயகுமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், வீட்டில் இருந்து புறப்படும் நாம் அதேபோல மீண்டும் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 480 முதல் 485 வரை விபத்தில் இறக்கின்றனா். தமிழகத்தில் மட்டும் ஒரு மணி நேரத்துக்கு 2 போ் என நாள் ஒன்றுக்கு சராசரியாக 51 போ் வரை சாலை விபத்தில் சிக்கி இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் 2024-ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 536 பேரும், 2025-இல் 496 பேரும் உயிரிழந்துள்ளனா்.

விழிப்புணா்வு பிரசாரங்கள் மூலம் சாலை விபத்துகள், உயிரிழப்புகளைக் குறைத்துள்ளோம். போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக சென்னையில் ஆண்டுதோறும் 18 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. போக்குவரத்து விதிமீறலால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க பாதசாரிகள், வாகன ஓட்டிகளின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.