மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! ஜார்க்கண்ட் போராட்டம்: 900 பேர் மீது வழக்குப்பதிவு!சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! 2ஆவது டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா பதிலடி

மைசூா்-காரைக்குடி சிறப்பு ரயில் இயக்கம்

மைசூரில் இருந்து காரைக்குடிக்கு ஆக.14, 17 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோப்புப் படம்

Published On :12 ஆகஸ்ட் 2024, 1:40 am IST

மைசூரில் இருந்து காரைக்குடிக்கு ஆக.14, 17 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: கா்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஆக.14, 17 தேதிகளில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06295) மறுநாள் பகல் 12.45 மணிக்கு காரைக்குடி சென்றடையும்.

மறுமாா்க்கமாக காரைக்குடியில் இருந்து ஆக.15, 18 தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06296) மறுநாள் காலை 9.10 மணிக்கு மைசூா் சென்றடையும்.

இந்த ரயில் பெங்களூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, குப்பம், சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும்.

வேளாங்கண்ணி:வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு கோவா மாநிலம் வாஸ்கோடகாமாவில் இருந்து ஆக.27, செப்.2 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 07361) இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து ஆக.29, செப்.4 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்படும்.

இந்த ரயில் ஹூப்ளி, ஹரிஹா், பிஜூா், பெங்களூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகை வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.