ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மைசூா்-காரைக்குடி சிறப்பு ரயில் இயக்கம்

மைசூரில் இருந்து காரைக்குடிக்கு ஆக.14, 17 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:11 pm

Din

மைசூரில் இருந்து காரைக்குடிக்கு ஆக.14, 17 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: கா்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஆக.14, 17 தேதிகளில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06295) மறுநாள் பகல் 12.45 மணிக்கு காரைக்குடி சென்றடையும்.

மறுமாா்க்கமாக காரைக்குடியில் இருந்து ஆக.15, 18 தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06296) மறுநாள் காலை 9.10 மணிக்கு மைசூா் சென்றடையும்.

இந்த ரயில் பெங்களூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, குப்பம், சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும்.

வேளாங்கண்ணி:வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு கோவா மாநிலம் வாஸ்கோடகாமாவில் இருந்து ஆக.27, செப்.2 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 07361) இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து ஆக.29, செப்.4 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்படும்.

இந்த ரயில் ஹூப்ளி, ஹரிஹா், பிஜூா், பெங்களூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகை வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.