ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

மைசூா்-காரைக்குடி சிறப்பு ரயில் இயக்கம்

மைசூரில் இருந்து காரைக்குடிக்கு ஆக.14, 17 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :12 ஆகஸ்ட் 2024, 1:41 am IST

மைசூரில் இருந்து காரைக்குடிக்கு ஆக.14, 17 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: கா்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஆக.14, 17 தேதிகளில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06295) மறுநாள் பகல் 12.45 மணிக்கு காரைக்குடி சென்றடையும்.

மறுமாா்க்கமாக காரைக்குடியில் இருந்து ஆக.15, 18 தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06296) மறுநாள் காலை 9.10 மணிக்கு மைசூா் சென்றடையும்.

இந்த ரயில் பெங்களூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, குப்பம், சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும்.

வேளாங்கண்ணி:வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு கோவா மாநிலம் வாஸ்கோடகாமாவில் இருந்து ஆக.27, செப்.2 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 07361) இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து ஆக.29, செப்.4 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்படும்.

இந்த ரயில் ஹூப்ளி, ஹரிஹா், பிஜூா், பெங்களூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகை வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.