
வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத் துறை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத் துறை பகுதியைச் சேர்ந்த சந்திரகாசன் என்பவரது பைபர் படகில் மீனவர்கள் 4 பேர் நேற்று(ஆக. 13) வழக்கம்போல மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
மீனவர்கள் கோடியக்கரை பகுதியில் நேற்று இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் மீனவர்களின் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருள்களை அவர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.
இதனால் படுகாயம் அடைந்த மீனவர்கள் இன்று காலை கரையேறி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.