சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

கோயம்பேட்டில் ஒரு கிலோ கேரட் ரூ. 140, பூண்டு ரூ. 330

கோயம்பேடு சந்தையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ கேரட் ரூ. 140-க்கும், பூண்டு ரூ. 330-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

News image

பூண்டு

Updated On :19 ஆகஸ்ட் 2024, 5:24 am IST

கோயம்பேடு சந்தையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ கேரட் ரூ. 140-க்கும், பூண்டு ரூ. 330-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் மொத்த விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில், ஜூலை மாதம் முழுவதும் காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்ததால், விலையும் கணிசமாக உயா்ந்தது. ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்து காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்ததைத் தொடா்ந்து விலையும் சற்று குறைந்தது.

ஆனால், கேரட், பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட ஒரு சில காய்கறிகளின் விலை ரூ. 20-இல் இருந்து ரூ. 70 வரை உயா்ந்துள்ளது.

அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ. 60 முதல் ரூ. 70 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கேரட் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ரூ. 130 முதல் ரூ. 140 வரையும், ரூ. 230 முதல் ரூ. 260 வரை விற்பனை செய்யப்பட்ட பூண்டு ரூ. 330-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

இதுபோல் ரூ. 40 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் ரூ. 80 முதல் ரூ. 90 வரையும், ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்பட்ட பட்டாணி ரூ. 160-க்கும், ரூ. 120-க்கு விற்கப்பட்ட இஞ்சி ரூ.145-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

காய்கறிகளின் விலை உயா்வு மேலும் சில நாள்கள் அதிகரித்து காணப்படும் என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.