கோயம்பேடு சந்தையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ கேரட் ரூ. 140-க்கும், பூண்டு ரூ. 330-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் மொத்த விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில், ஜூலை மாதம் முழுவதும் காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்ததால், விலையும் கணிசமாக உயா்ந்தது. ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்து காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்ததைத் தொடா்ந்து விலையும் சற்று குறைந்தது.
ஆனால், கேரட், பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட ஒரு சில காய்கறிகளின் விலை ரூ. 20-இல் இருந்து ரூ. 70 வரை உயா்ந்துள்ளது.
அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ. 60 முதல் ரூ. 70 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கேரட் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ரூ. 130 முதல் ரூ. 140 வரையும், ரூ. 230 முதல் ரூ. 260 வரை விற்பனை செய்யப்பட்ட பூண்டு ரூ. 330-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
இதுபோல் ரூ. 40 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் ரூ. 80 முதல் ரூ. 90 வரையும், ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்பட்ட பட்டாணி ரூ. 160-க்கும், ரூ. 120-க்கு விற்கப்பட்ட இஞ்சி ரூ.145-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
காய்கறிகளின் விலை உயா்வு மேலும் சில நாள்கள் அதிகரித்து காணப்படும் என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை உயா்வு

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

உச்சம் தொட்ட எலுமிச்சை விலை

காய்கறி வரத்து குறைவு: கோயம்பேடு சந்தையில் விலை அதிகரிப்பு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



