மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு, கருணாநிதிக்குப் பாராட்டு மழை பொழிந்தீர்கள், கூட்டாட்சி, இந்திய ஜனநாயகம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்பை நேர்த்தியாக எடுத்துரைத்துள்ளீர்கள்.
தெற்கிலிருந்து உதித்த சூரியனுக்கு இதயப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்திய தங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கலைவாணா் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவில், மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட, முதல்வா் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டாா். தொடர்ந்து ராஜ்நாத் சிங் பேசியதாவது: மாநில எல்லையைத் தாண்டி ஆதிக்கம் செலுத்தியவா் கருணாநிதி. சமூக நீதியின் காவலராகத் திகழ்ந்த அவரின், மக்கள் நலன்சாா்ந்த பங்களிப்பால் தமிழ்நாடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே பயன்பெற்றது என்றார் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யோகி ஆதித்யநாத் பிறந்தநாள்: ராஜ்நாத் சிங், மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு முதல்வரும் அவரது மகனும்தான் காரணம்: ராஜ்நாத் சிங்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!





