கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

ஒடிசாவில் மின்னல் தாக்கி 2 நாட்களில் 15 பேர் பலி

ஒடிசாவின் ஐந்து வெவ்வேறு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் 6 பேர் பலியாகினர்.

கோப்புப்படம்.

Published On :

ஒடிசாவின் ஐந்து வெவ்வேறு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் 6 பேர் பலியாகினர்.

ஒடிசா மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் கேந்திரபரா மாவட்டத்தில் 2 பேரும், பாலசோர், பத்ரக், ஜாஜ்புர் மற்றும் சுபர்னாபுர் ஆகிய இடங்களில் தலா ஒருவர் என மொத்தம் 6 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். இத்துடன் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களில் மின்னல் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் மின்னல் தாக்கி பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மாஜி, காயமடைந்தவர்கள் அனைவருக்கும் சிகிச்சை செலவை மாநில அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார்.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஒடிசாவில் மின்னல் தாக்கி இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மின்னல் தாக்கி மட்டும் சுமார் 300 பேர் இறக்கின்றனர். இதனிடையே, ஒடிசாவில் மின்னல் இறப்பு எண்ணிக்கையை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வர அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சுரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.