மலேசிய பிரதமர் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகை

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது மூன்று நாள் அரசு முறைப் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வருகிறார்.
Photo: IANS
Photo: IANS
Published on
Updated on
1 min read

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது மூன்று நாள் அரசு முறைப் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வருகிறார்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், அன்வார் இப்ராஹிம் இன்று முதல் 21-ம் தேதி வரை இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Photo: IANS
கமலா ஹாரிஸைவிட நான் அழகானவன் டிரம்ப் மீண்டும் உருவ கேலி

இதையடுத்து அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய்கிழமை முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்த உள்ளார்.

அதன்பிறகு பிரதமர் மோடியுடன் இருத்தரப்பு உறவு குறித்து அவர் விவாதிக்க உள்ளார். தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் அன்வார் இப்ராஹிம் சந்தித்து கலந்துரையாடுகிறார்.

மேலும் இந்த பயணத்தின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் மலேசிய பிரதமர் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com