டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மலேசிய பிரதமர் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகை

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது மூன்று நாள் அரசு முறைப் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வருகிறார்.

News image
Photo: IANS
Updated On :19 ஆகஸ்ட் 2024, 3:21 am

DIN

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது மூன்று நாள் அரசு முறைப் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வருகிறார்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், அன்வார் இப்ராஹிம் இன்று முதல் 21-ம் தேதி வரை இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய்கிழமை முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்த உள்ளார்.

அதன்பிறகு பிரதமர் மோடியுடன் இருத்தரப்பு உறவு குறித்து அவர் விவாதிக்க உள்ளார். தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் அன்வார் இப்ராஹிம் சந்தித்து கலந்துரையாடுகிறார்.

மேலும் இந்த பயணத்தின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் மலேசிய பிரதமர் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.