வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தில்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 33-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :22 ஆகஸ்ட் 2024, 4:43 am

DIN

தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.

தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் பங்கீட்டில் ஏற்படும் பிரச்னைகளை காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவை பேசி தீர்த்து வருகின்றன.

இதுவரை காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 32 முறை கூடியுள்ள நிலையில், இன்று 33-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறுகிறது.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தில்லியில் உள்ள அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.