மதுரையில் செப்.6 முதல் புத்தகக் காட்சி!
மதுரையில் செப்.6 முதல் செப். 16 ஆம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், மதுரையில் நடப்பு ஆண்டுக்கான புத்தகக் காட்சி வருகிற செப். 6 ஆம் தேதி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
செப். 6 தொடங்கி செப். 16 ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெற உள்ளது. மதுரையில் தமுக்கம் மைதானத்தில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது.
இதற்காக 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுவதாகதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.