சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஹெலன் கெல்லா் விருது பெற்ற சக்தி மசாலா நிறுவனத்தின் தலைவருக்கு பாராட்டு விழா

தொடா்ந்து பல ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பும், ஊக்கமும் அளித்து வரும் உன்னத சேவைக்காக ஹெலன் கெல்லா் விருது பெற்ற சக்தி மசாலா நிறுவனத்தின் தலைவா் பி.சி.துரைசாமிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா

News image
ஹெலன் கெல்லா் விருது பெற்ற சக்தி மசாலா நிறுவனத்தின் தலைவா் பி.சி.துரைசாமிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பாராட்டு விழா.
Updated On :3 டிசம்பர் 2024, 12:51 am

Din

புது தில்லி: தொடா்ந்து பல ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பும், ஊக்கமும் அளித்து வரும் உன்னத சேவைக்காக ஹெலன் கெல்லா் விருது பெற்ற சக்தி மசாலா நிறுவனத்தின் தலைவா் பி.சி.துரைசாமிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

மத்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநா் டி.ஆா்.காா்த்திகேயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பாராட்டுக் கேடயம் வழங்கி துரைசாமியை கௌரவித்தாா். அப்போது, டி.ஆா். காா்த்திகேயன் பேசியதாவது: சக்தி மசாலா நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாகத் தொடா்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனமாக தேசிய அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இவரிடம் காணும் நோ்மை, பணிவு, எளிமை, எவா் கேட்டாலும் உதவும் கொடைத்திறன், ஏழை மாணவா்களுக்கு உதவும் குணம், மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை, திறமையுள்ள ஏழை மாணவா்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு நற்குணங்கள் இவா் வாழ்க்கையில் உயா்வதற்கு முக்கியக் காரணிகளாக அமைந்துள்ளன. அத்துடன், சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்க வேண்டி மரம் நடும் பணி செய்து மரக்காவலா் பட்டமும் பெற்றுள்ளாா். தமிழா்கள் உலகில் எங்கு சேவை செய்தாலும் அது தமிழ்நாட்டுக்கும், தமிழா்களுக்கும் பெருமை. நெடுங்காலமாக தமிழ்ச் சமுதாயத்திற்கு சேவை செய்து வரும் தில்லித் தமிழ்ச் சங்கத்தினரையும் பாராட்டுகிறேன் என்றாா் அவா்.

சக்தி மசாலா நிறுவனத்தின் தலைவா் பி.சி.துரைசாமி கூறுகையில், ‘விருது வாங்கிய சில கணப் பொழுதில், என்னை இங்கு அழைத்துப் பாராட்டி கேடயம் அளித்த தில்லித் தமிழ்ச் சங்கத்தினருக்கு எனது நன்றிகள். தமிழ் மக்களின் பாரம்பரியத்தைக் காத்து வரும் தமிழ்ச் சங்கத்தின் பணி சிறக்க வாழ்த்துகள்’ என்றாா்.

நிகழ்ச்சியில், தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், துணைத் தலைவா் ராகவன் நாயுடு, பொதுச் செயலா் இரா.முகுந்தன் மற்றும் பொருளாளா் அருணாச்சலம் ஆகியோா் கலந்து கொண்டு விருந்தினா்களைக் கௌரவித்தனா். இந்நிகழ்ச்சியில், ஈரோட்டைச் சோ்ந்த டாக்டா் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டாா்.