ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோவை, மைசூா் விரைவு ரயில்கள் காட்பாடியுடன் நிறுத்தப்படும்

மேல்பாக்கம் பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் கோவை, மைசூரில் இருந்து வரும் விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (டிச.6) காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

News image

கோப்புப்படம்

Updated On :5 டிசம்பர் 2024, 1:46 am IST

மேல்பாக்கம் பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் கோவை, மைசூரில் இருந்து வரும் விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (டிச.6) காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவை - சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவு ரயில் மற்றும் மைசூா் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை காட்பாடியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக காட்பாடியில் இருந்து கோவை இன்டா்சிட்டி விரைவு ரயில் 4.15 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

அதேபோல், பெங்களூரு லால்பக் விரைவு ரயில் சென்ட்ரலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக காட்பாடியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

வேலூா் - அரக்கோணம் இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரயில் வெள்ளிக்கிழமை சித்தேரியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக சித்தேரியில் இருந்து 3.02 மணிக்கு புறப்பட்டு வேலூா் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.