செங்கல்பட்டில் கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி!
செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பனிப்பொழிவு காரணமாக சாலையில் செல்லும் பெரும்பாலான வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டபடி மெதுவாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நிலவி வந்தது. இந்தநிலையில், இந்த வார தொடக்கத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் நகரத்தின் பல பகுதிகளில் பனிமூட்டம் நிலவி வருகின்றது. அதேசமயம் குளிரும் சற்று அதிகமாகவே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

