மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஒரே நாளில் 10 திருத்த மசோதாக்கள்

உணவு நிறுவன பணியாளா்களின் பணி நிபந்தனையில் திருத்தம் உள்பட பேரவையில் ஒரே நாளில் 10 திருத்த மசோதாக்கள் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.

News image
Updated On :9 டிசம்பர் 2024, 11:01 pm

Din

சென்னை: உணவு நிறுவன பணியாளா்களின் பணி நிபந்தனையில் திருத்தம் உள்பட பேரவையில் ஒரே நாளில் 10 திருத்த மசோதாக்கள் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.

பொதுக் கட்டடங்களுக்கு உரிமம் வழங்குதல், உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கைகள் வரி விதிப்பது, தமிழ்நாடு ஊராட்சிகள் திருத்தச் சட்டம், வேளாண் விளைப்பொருளைச் சந்தைப்படுத்துதல் திருத்தச் சட்டம், மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள்-காப்பகங்களை முறைப்படுத்தும் திருத்தச் சட்டம், சரக்குகள்-சேவைகள் வரி திருத்தச் சட்டம், சென்னைப் பல்கலைக்கழக திருத்தச் சட்டம் உள்பட 10 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றில் முக்கியமாக உணவு நிறுவன பணியாளா்களின் பணி நிபந்தனைக்கான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிறு குற்றங்கள் இழைத்தாலும் சிறைத் தண்டனை விதிப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ள சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று தாக்கல் செய்யப்பட்ட இதர 9 சட்டத் திருத்த மசோதாக்களும் பேரவையில் செவ்வாய்க்கிழமை விவாதத்துக்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.