47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா மரணம்!

கோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா உடல் நலக்குறைவால் காலமானார்.

News image
எஸ்.ஏ.பாஷா
Updated On :16 டிசம்பர் 2024, 1:42 pm

DIN

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட எஸ்.ஏ.பாஷா உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை மாலை உயிரிழந்தார்.

1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கோயம்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதாகி சிறைக்குச் சென்ற பாஷா நீண்ட நாள்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில் தனது இல்லத்தில் திங்கள்கிழமை உயிரிழந்தார். தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-உம்மாவை நிறுவியவர் பாஷா. பாஷா பிஎஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் மாலை 6.20 மணியளவில் மரணமடைந்ததாக அவரது மகன் சித்திக் அலி தெரிவித்துள்ளார்.

பாஷா மற்றும் அல்-உம்மாவைச் சேர்ந்த 16 பேர் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பிப்ரவரி 1998 முதல் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிப்ரவரி 18 ஆம் தேதி ஜாமீன் பெற்று வெளியேவந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.