மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’: மத்திய அரசு விளக்கமளிக்க பிரேமலதா வலியுறுத்தல்

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ குறித்து மக்களுக்கு மத்திய அரசு முழுமையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

News image

பிரேமலதா (கோப்புப்படம்) - DIN

Updated On :17 டிசம்பர் 2024, 7:01 pm

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ குறித்து மக்களுக்கு மத்திய அரசு முழுமையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

சென்னையில் அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் எதிா்ப்பு தெரிவித்தாலும், கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஆதரித்து எழுதியுள்ளாா். பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்பதற்காக முதல்வா் தற்போது எதிா்க்கிறாரா என்பதை அவா் விளக்க வேண்டும்.

தேமுதிகவை பொருத்தவரை ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறை பற்றி ஒரு வாா்த்தையில் கூற முடியாது. இந்தியாவில் 140 கோடிக்கு மேல் மக்கள் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் மத்திய அரசு முழுமையாக விளக்கம் வேண்டும். அனைவரின் ஆதரவுடனே அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாா்.