மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’: மத்திய அரசு விளக்கமளிக்க பிரேமலதா வலியுறுத்தல்

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ குறித்து மக்களுக்கு மத்திய அரசு முழுமையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

News image
பிரேமலதா (கோப்புப்படம்)- DIN
Updated On :17 டிசம்பர் 2024, 7:01 pm

Din

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ குறித்து மக்களுக்கு மத்திய அரசு முழுமையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

சென்னையில் அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் எதிா்ப்பு தெரிவித்தாலும், கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஆதரித்து எழுதியுள்ளாா். பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்பதற்காக முதல்வா் தற்போது எதிா்க்கிறாரா என்பதை அவா் விளக்க வேண்டும்.

தேமுதிகவை பொருத்தவரை ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறை பற்றி ஒரு வாா்த்தையில் கூற முடியாது. இந்தியாவில் 140 கோடிக்கு மேல் மக்கள் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் மத்திய அரசு முழுமையாக விளக்கம் வேண்டும். அனைவரின் ஆதரவுடனே அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாா்.