சென்னையில் தூறல் தொடங்கிய நிலையில் இந்த மழை குறித்து சமூக ஊடகங்களில் வரும் தகவல்களைப் பார்த்து பயப்பட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் 11 மணியளவில் பரவலாக லேசான மழை தொடங்கியிருக்கிறது.
தற்போது சென்னையில் அம்பத்தூர், மயிலாப்பூர், மெரினா, பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 9 சென்டி மீட்டர், ஶ்ரீவில்லிபுத்தூரில் 5 சென்டி மீட்டர் என்ற அளவிலும் கன மழை பெய்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோயிலுக்குள் மழை நீர் தேங்கியிருக்கிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர்.
இதையும் படிக்க.. சென்னைக்கு இதுதான் கடைசி மழையா?
இந்த மழை குறித்து அச்சப்பட வேண்டுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், அரக்கன் வரான் என்று சமுக ஊடகங்களில் வரும் தகவல்களைப் பார்த்து பயப்பட வேண்டாம், அணைகள் நிரம்பி ஆபத்து ஏற்படுமா என்றால் இல்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா, விழுப்புரம் கடலோரப் பகுதி, புதுவை, கடலூர் பகுதிகளுக்கு மழை வாய்ப்பு இல்லை. தென் மாவட்டங்களில் குமரிக்கு மட்டுமே முழுமையாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மழை இது மொத்தமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கான மழை மட்டுமே. ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தான் மழை கிடைக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா் கைது
நடிகருடன் திருமணம்... தயாரிப்பாளர் பேச்சால் வெட்கப்பட்ட மிருணாள்!

புலம்பும் த்ரிஷா... என்ன ஆச்சு?

கவனம் பெறும் சூர்யா - 47 தோற்றம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


