சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பழிக்குப் பழி! நெல்லை நீதிமன்ற வாசலில் படுகொலை!

திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்தவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

News image
கோப்புப் படம்
Updated On :20 டிசம்பர் 2024, 5:48 am

DIN

திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்தவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

திருநெல்வேலியில் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் குற்ற வழக்கு தொடர்பாக விசாரணைக்காக, வெள்ளிக்கிழமை (டிச. 20) காலை 10.15 மணிக்கு பாளையங்கோட்டை அருகே உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

கொலை செய்யப்பட்டவரின் சிதைந்த நிலையில் இருப்பதாகவும் கூறுகின்றனர். கொலை செய்யப்பட்ட மாயாண்டி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் இருந்ததையும் மீறி, இவ்வாறான துணிகரச் சம்பவம் நடந்தேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்னர் நடந்த கொலை சம்பவத்துக்கு பழிக்குப் பழியாக இந்த படுகொலை சம்பவம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், நீதிமன்றத்தில் காவல்துறையினர் சரிவரச் செயல்படவில்லை எனக் கூறி, வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.