சிவகங்கை: சிவகங்கை அருகே அண்ணாமலை நகர் பகுதியில் நெய் வியாபாரி நேற்று(ஜூலை 25) நள்ளிரவில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வி. புதுக்குளத்தை சேர்ந்தவர் ரஜினி (35). நெய் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பில் இருந்து இளையான்குடி சாலை செல்லும் வழியில் உள்ள அண்ணாமலை நகரில் உள்ள தைல மரங்கள் உள்ள வனப்பகுதியில் கழுத்தறுத்து இறந்து கிடந்தார்.
இது குறித்து அப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றவர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை சிவகங்கை நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ரஜினியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனை செய்வதற்காக, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரஜினிக்கு சரண்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் அண்ணாமலை நகர் பகுதியில் நெய் வியாபாரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொலை நேற்று நள்ளிரவு அல்லது இன்று அதிகாலை நடந்திருக்கலாம் என்பதால் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு காரணமா? அல்லது முன்விரோதம் எதுவும் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்கிற சந்தேகங்களின் அடிப்படையில் போலீஸார் தீவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
The police are investigating the murder of a ghee merchant whose throat was slit late last night (July 25) in the Annamalai Nagar area near Sivaganga.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடலூா் அருகே தொழிலாளி கழுத்தறுத்து கொலை

நாகா்கோவில் சிறையில் வியாபாரி கொலை: 8 கைதிகள் பாளை. சிறைக்கு மாற்றம்

சேலம் அருகே கழுத்தறுத்து ஒருவர் கொலை! காவிரியில் வீசப்பட்ட சடலம்!

உடற்பயிற்சியாளர் சுட்டுக் கொலை! தொடரும் என பிஷ்னோய் கும்பல் எச்சரிக்கை
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP




