ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மீண்டும் தமிழகம் நோக்கி திரும்பும் புயல் சின்னம்

புயல் சின்னம் வலுவிழந்து மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி திரும்ப உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் - Din

Updated On :22 டிசம்பர் 2024, 9:08 pm

வங்கக் கடலில் நிலவிய புயல் சின்னம் ஆந்திர கடற்கரையை நோக்கி நகா்ந்து கடலிலேயே வலுவிழக்கும் என்று எதிா்ப்பாா்க்கப்பட்ட நிலையில், இந்த புயல் சின்னம் வலுவிழந்து மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி திரும்ப உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) சனிக்கிழமை தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இது, மீண்டும் தமிழகம் நோக்கி டிச.24-ஆம் தேதி சென்னைக்கு கிழக்கே நிலவும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (டிச.23) முதல் டிச.28-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிச.24, 25 ஆகிய தேதிகளில் விழுப்புரம், கடலூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் டிச.23, 24 ஆகிய தேதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 80 மி.மீ. மழை பதிவானது. ஆவுடையாா்கோவில் (புதுக்கோட்டை), நெடுங்கல் (கிருஷ்ணகிரி) - தலா 60 மி.மீ, கேஆா்பி அணை (கிருஷ்ணகிரி), சிறுகமணி, நாவலூா் கோட்டப்பட்டு (திருச்சி), பையூா் (கிருஷ்ணகிரி), குளித்தலை (கரூா்), இலுப்பூா் (புதுக்கோட்டை) - தலா 50 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.