ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தாமதம்!

திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது பற்றி...

News image

நடுவழியில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் - Din

Updated On :23 டிசம்பர் 2024, 1:27 pm IST

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு, அதிர்வுகள் கேட்டதால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.

சென்னை எழும்பூரிலிருந்து புதுச்சேரி நோக்கி பயணிகளுடன் திங்கள்கிழமை காலை புறப்பட்ட பயணிகள் ரயில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ள ஒங்கூர் பகுதிக்கு வந்த போது, திடீரென கடுமையான அதிர்வு ஏற்படுவதை உணர்ந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். தொடர்ந்து கீழே இறங்கிச்சென்று ரயில் தண்டவாளத்தை பார்த்தார்.

அப்போது ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுநர், இது தொடர்பான தகவலை உடனடியாக திண்டிவனம் ரயில் நிலையத்திலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ரயில்வே பொறியாளர்களும், ரயில்வே ஊழியர்களும், நிகழ்விடம் விரைந்து சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் அவ்வழியாக சென்ற மற்ற ரயில்களும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சரி செய்யப்பட்ட பிறகு, சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக புதுச்சேரி நோக்கி ரயில் புறப்பட்டுச் சென்றது.

இதனால் அவ்வழியாக செல்லவிருந்த திருச்செந்தூர் விரைவு ரயில், குருவாயூர் விரைவு ரயில் உள்ளிட்ட பல்வேறு விரைவு ரயில்கள் சென்று சேர்வதில் இன்று சுமார் ஒரு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை கண்டறிந்து சரியான நேரத்தில் ரயிலை நிறுத்திய ரயில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.