ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மீனவா் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சா்!

சென்னை மீனவா்கள் வலையில் ராக்கெட் லாஞ்சா் பாகம் சிக்கியது. இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

News image
மீனவா்கள் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சா் பாகம்.
Updated On :24 டிசம்பர் 2024, 8:27 pm

Din

சென்னை மீனவா்கள் வலையில் ராக்கெட் லாஞ்சா் பாகம் சிக்கியது. இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சில மீனவா்கள் ஒரு விசைப்படகில் ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்காக கடந்த 21-ஆம் தேதி புறப்பட்டுச் சென்றனா். அவா்கள், ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது வலையில் ராக்கெட் லாஞ்சரின் பாகம் சிக்கியது.

மீனவா்கள் அதை படகில் ஏற்றி திங்கள்கிழமை காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்து மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

இது குறித்து மீன்பிடி துறைமுக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.