புஸ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்யும் விஜய்! உதயநிதி கடும் விமர்சனம்! நம்பிக்கை வாக்கெடுப்பு! பேரவைக்கு வராமல் மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு!நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்தவெகவில் குதிரை பேரம் நடந்தது; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதாநம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன் தமிழ்நாட்டை காப்பாற்றும் விஜய் என்னை காப்பாற்ற மாட்டாரா?எம்.எல்.ஏ. காமராஜ் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15% ஆக உயர்வு!தவெக அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு காங்கிரஸ், சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆதரவு!முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்!
/

ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தார் அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று (டிச. 30) சந்தித்துள்ளார்.

News image

ஆளுநர் மாளிகைக்கு வருகை புரிந்த அண்ணாமலை

Updated On :30 டிசம்பர் 2024, 6:59 pm IST

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று (டிச. 30) சந்தித்தார்.

கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாகத் தெரிகிறது.

அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் திமுகவைச் சேர்ந்தவர் என தொடர்ந்து பாஜக குற்றம் சாட்டி வரும் நிலையில், ஆளுநரை சந்தித்து அண்ணாமலை மனு அளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று காலை ஆளுநரை சந்தித்து மனு அளித்திருந்தார். அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து தற்போது அண்ணாமலையும் பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து ஆளுநரை சந்தித்துள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.