அண்ணா பல்கலை. விவகாரம்: மகளிர் ஆணையம் இன்றும் விசாரணை!
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையக்குழு இன்றும் விசாரணை நடத்துகிறது.


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையக்குழு இன்றும் விசாரணை நடத்துகிறது.
அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஊழியர்களிடம் நேற்று 7 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில், இன்றும் விசாரணை நடைபெறவுள்ளது.
விசாரணை முழுமையாக நிறைவடைந்த பிறகு, அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மகளிர் ஆணையக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
மகளிர் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழுவில் உள்ள மம்தா குமாரி, பிரவீன் தீக்சித் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரணையை தொடர்பான ஆவணங்களைப் பெற்று விசாரணையைத் தொடங்கியுள்ளது.
வளாகத்தில் வன்கொடுமை
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வரும் மாணவி, தனது ஆண் நண்பருடன் திங்கள்கிழமை கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்குவந்த அடையாளம் தெரியாத இருவர், மாணவரைத் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக ஞானசேகரன் (33) என்பரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் காவல் துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி (எஃப்.ஐ.ஆர்.) பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க | ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான ஒப்பந்தம் ரத்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...