ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக பயணியிடம் ரூ. 1.8 லட்சம் மோசடி செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனியை சேர்ந்த ஸ்ரீதரன்(51) என்பவர் ரயில்வேவின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐஆர்சிடிசி-யில் முன்பதிவு பயணச்சீட்டை ரத்து செய்துள்ளார்.
தொடர்ந்து, இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்த 9832603458 என்ற உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பயணச்சீட்டு கட்டணத்தை ஸ்ரீதரன் திரும்பக் கேட்டுள்ளார். அப்போது வங்கிக் கணக்கு விவரங்கள் அளித்த சில நிமிடங்களிலேயே ரூ.1.8 லட்சம் பணத்தை எடுத்துள்ளனர்.
இதனையடுத்து, உடனடியாக திநகர் காவல் துணை ஆணையரிடம் உடனடியாக ஸ்ரீதரன் புகார் அளித்துள்ளார்.
முதல்கட்ட விசாரணையில், ஐஆர்சிடிசி இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்த உதவி எண், ரயில்வே நிர்வாகத்தால் பதிவிடப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, ஐஆர்சிடிசி இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து சென்னை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


