தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக ரூ. 1.8 லட்சம் மோசடி!

ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக பயணியிடம் ரூ. 1.8 லட்சம் மோசடி செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :1 பிப்ரவரி 2024, 3:33 am

ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக பயணியிடம் ரூ. 1.8 லட்சம் மோசடி செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனியை சேர்ந்த ஸ்ரீதரன்(51) என்பவர் ரயில்வேவின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐஆர்சிடிசி-யில் முன்பதிவு பயணச்சீட்டை ரத்து செய்துள்ளார்.

தொடர்ந்து, இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்த 9832603458 என்ற உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பயணச்சீட்டு கட்டணத்தை ஸ்ரீதரன் திரும்பக் கேட்டுள்ளார். அப்போது வங்கிக் கணக்கு விவரங்கள் அளித்த சில நிமிடங்களிலேயே ரூ.1.8 லட்சம் பணத்தை எடுத்துள்ளனர்.

இதனையடுத்து, உடனடியாக திநகர் காவல் துணை ஆணையரிடம் உடனடியாக ஸ்ரீதரன் புகார் அளித்துள்ளார்.

முதல்கட்ட விசாரணையில், ஐஆர்சிடிசி இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்த உதவி எண், ரயில்வே நிர்வாகத்தால் பதிவிடப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, ஐஆர்சிடிசி இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து சென்னை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.