ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக பயணியிடம் ரூ. 1.8 லட்சம் மோசடி செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனியை சேர்ந்த ஸ்ரீதரன்(51) என்பவர் ரயில்வேவின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐஆர்சிடிசி-யில் முன்பதிவு பயணச்சீட்டை ரத்து செய்துள்ளார்.
தொடர்ந்து, இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்த 9832603458 என்ற உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பயணச்சீட்டு கட்டணத்தை ஸ்ரீதரன் திரும்பக் கேட்டுள்ளார். அப்போது வங்கிக் கணக்கு விவரங்கள் அளித்த சில நிமிடங்களிலேயே ரூ.1.8 லட்சம் பணத்தை எடுத்துள்ளனர்.
இதனையடுத்து, உடனடியாக திநகர் காவல் துணை ஆணையரிடம் உடனடியாக ஸ்ரீதரன் புகார் அளித்துள்ளார்.
முதல்கட்ட விசாரணையில், ஐஆர்சிடிசி இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்த உதவி எண், ரயில்வே நிர்வாகத்தால் பதிவிடப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, ஐஆர்சிடிசி இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து சென்னை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.