அண்ணா நினைவுநாளையொட்டி அறிஞர் அண்ணா படத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயினிலிருந்தவாறு மரியாதை செலுத்தினார்.
ஸ்பெயின் நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மு.க. ஸ்டாலின், அண்ணாவின் திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் (எக்ஸ்) பதிவிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக - அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள்!
இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு மத்தியில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்!
எண்ணித் துணிக கருமம்! என்றென்றும் அண்ணா எனக் குறிப்பிட்டுள்ளார்.