மக்கள் நீதி மய்யம் தனிச்சின்னத்தில் போட்டியா?

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்தாலும் டார்ச்லைட் சின்னத்தில்தான் போட்டி என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் (கோப்புப்படம்)
கமல்ஹாசன் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்தாலும் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மநீம தலைவா் கமல்ஹாசன்  மக்களவைத் தோ்தல் கூட்டணி தொடா்பாக விரைவில் அறிவிப்பேன். அதேபோல நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்பதையும் விரைவில் அறிவிப்பேன் என்று முன்னதாக தெரிவித்திருந்தார்.

சமீப காலமாக திமுகவுடன் நெருங்கிய நட்பில் கமல்ஹாசன் உள்ளார். இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

முதல்வர் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும்  கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்ற தகவலும் வெளியானது.

மக்களவைத் தோ்தலில் மநீமவுக்கு டாா்ச் லைட் சின்னம் ஒதுக்குமாறு தோ்தல் ஆணையத்திடம், அக்கட்சி சாா்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  கூட்டணி அமைத்தாலும் டார்ச்லைட் சின்னத்தில்தான் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்றும்,  டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் தனிச்சின்னத்தில் ம.நீ.ம. போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com