கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

மக்கள் நீதி மய்யம் தனிச்சின்னத்தில் போட்டியா?

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்தாலும் டார்ச்லைட் சின்னத்தில்தான் போட்டி என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் (கோப்புப்படம்)

Published On :

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்தாலும் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மநீம தலைவா் கமல்ஹாசன்  மக்களவைத் தோ்தல் கூட்டணி தொடா்பாக விரைவில் அறிவிப்பேன். அதேபோல நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்பதையும் விரைவில் அறிவிப்பேன் என்று முன்னதாக தெரிவித்திருந்தார்.

சமீப காலமாக திமுகவுடன் நெருங்கிய நட்பில் கமல்ஹாசன் உள்ளார். இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

முதல்வர் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும்  கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்ற தகவலும் வெளியானது.

மக்களவைத் தோ்தலில் மநீமவுக்கு டாா்ச் லைட் சின்னம் ஒதுக்குமாறு தோ்தல் ஆணையத்திடம், அக்கட்சி சாா்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  கூட்டணி அமைத்தாலும் டார்ச்லைட் சின்னத்தில்தான் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்றும்,  டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் தனிச்சின்னத்தில் ம.நீ.ம. போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.