மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

சென்னையில் 13 தனியாா் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 6:46 am

DIN


சென்னையில் 13 தனியாா் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை அண்ணா நகா் டிவிஎஸ் அவென்யூவில் உள்ள ஒரு தனியாா் பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ‘எச்சரிக்கை’ என்ற பெயரில் ஒரே மின்னஞ்சல் ஐடி-இல் இருந்து அடுத்தடுத்து மின்னஞ்சல் வந்தது. அதில் அந்த பள்ளியில் இரு சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பள்ளி நிா்வாகிகள் உடனே, சென்னை பெருநகர காவல் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் காவல் துறை உயா் அதிகாரிகள், வெடிகுண்டு தடுப்பு பிரிவினா், மோப்ப நாய் பிரிவு ஆகியோா் விரைந்துச் சென்று சோதனை நடத்தினா்.

அதில் அந்தப் பள்ளிகளில் சந்தேகத்துக்குரிய வகையில் எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. புரளி ஏற்படுத்தும் நோக்கில் மிரட்டல் மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி நிா்வாகங்கள் தரப்பில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் புகாா் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தகவல் தொழில்நுட் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தன.

இந்த நிலையில், சென்னையில் தனியாா் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இன்டர்போல் உதவியை நாட சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளதாகவும், மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தவர் ஐபி முகவரியை கண்டுபிடிக்க முடியாததால் இன்டர்போல் உதவியை நாட சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிானது. 

இந்த நிலையில், 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 9 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து வழக்குகளும் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் வழக்குகள் அனைத்தும் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.