ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பிப்.22 வரை தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் பிப்ரவரி 22-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.

News image
பேரவைத் தலைவர் அப்பாவு - DOTCOM
Updated On :12 பிப்ரவரி 2024, 6:48 am

DIN

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

ஆனால், அரசு தயாரித்து கொடுத்த கொள்கை உரையில் உடன்பாடு இல்லை எனத் தெரிவித்த ஆளுநர், 2 நிமிடங்களில் உரையை முடித்து இருக்கையில் அமர்ந்தார்.

இந்த நிலையில், பிப்ரவரி 22-ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

மேலும், பிப். 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் ஆளுநர் உரை மீது விவாதமும், 15-ஆம் தேதி பதிலுரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப். 19-ஆம் தேதி 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும், 20-ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.