

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் பிப். 5-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
பகல் 12 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இறுதி செய்யப்பட உள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தோ்தல் நடைபெற உள்ளதால் தற்போதைய அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும். தோ்தல் முடிந்த பிறகு முழு பட்ஜெட்டை புதிய அரசு தாக்கல் செய்யும்.
இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடா் பிப்ரவரி இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
நிகழாண்டுக்கான தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் ஆளுநா் உரையுடன் கடந்த ஜன.20-ஆம் தேதி தொடங்கி ஜன.24-ஆம் தேதி வரை நடைபெற்றது.