மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காவலரை கார் ஏற்றிக் கொன்ற வழக்கு: நீதிமன்றத்தில் சரணடைந்த குற்றவாளி!

செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண்.

News image
Updated On :14 பிப்ரவரி 2024, 12:14 pm

DIN

விழுப்புரம் : ஆந்திர மாநிலம், குண்டரவாரிப்பள்ளி சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.

ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் அன்னமயா மாவட்டம், குண்டரவாரிப்பள்ளி அருகில் பிப்ரவரி 6 - ஆம் தேதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை போலீஸார் நிறுத்த முயன்ற போது, கார் நிற்காமல் சென்றது. மேலும் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் கணேசன் (32) மீது காரை ஏற்றி அந்த கும்பல் தப்பிச் சென்றது.

இது தொடர்பாக செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, 8 பேரைத் தேடி வந்தனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது.

இதையடுத்து செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அப்பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் முகாமிட்டனர்.

இதைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தைச் அருண்குமார், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அஜித் ஆகியோரை போலீஸார் கைது செய்து, மற்றவர்களைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை இன்னாடு ஊராட்சி, கீழ் நிலவூரைச் சேர்ந்த சின்னையன் மகன் ராமன் (31) விழுப்புரம் நீதித்துறை நடுவர் மன்றம் எண் - 2 - இல் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார். இதையடுத்து அவரை வேடம்பட்டு சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் அகிலா உத்தரவிட்டார்.

மேலும், வழக்கில் தொடர்புடைய கல்வராயன் மலையைச் சேர்ந்த மகேந்திரன், இளையராஜா, கஜேந்திரன், ராஜ்குமார், குமார் ஆகிய 5 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.