அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானம்!

தமிழக சட்டப்பேரவையில் ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

News image
முதல்வர் மு.க.ஸ்டாலின் - DOTCOM
Updated On :14 பிப்ரவரி 2024, 5:50 am

DIN

தமிழக சட்டப்பேரவையில் ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கை 19-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானங்களை இன்று முன்மொழிந்தார்.

தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் பேசியது:

“ஒரே நாடு ஒரே தேர்தலை கடுமையாக எதிர்க்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்திலிருந்து செல்லும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்க சதி செய்துள்ளனர். இதனை முறியடிக்க வேண்டும். இந்த இரண்டும் மக்களாட்சிக்கு எதிரானது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது முற்றிலும் நடைமுறைக்கு சாத்தியமற்றது. அரசியல் சட்டத்துக்கு எதிரானது. ஒரே தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைகளை முன்கூட்டியே கலைக்கும் சூழல் ஏற்படும். மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்தால் என்ன செய்ய முடியும். இதைவிட காமெடிக் கொள்கை வேறு இருக்காது. நாடாளுமன்ற தேர்தலைகூட ஒரே கட்டமாக நடத்த முடியாத சூழல் தான் உள்ளது. உள்ளாட்சிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலையில், அதற்கும் தேர்தல் நடத்தப்போவதாக கூறுவது மாநில உரிமைகளை பறிப்பதாகும்.

தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழக உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் சூழ்ச்சி உள்ளது. மக்கள் தொகையின்படி தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கு பரிசாக அமையும். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் தொகை கணக்கின்படி தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும். அனைத்து மாநிலங்களிலும் மக்கள் தொகை கட்டுப்படுத்துவதை தீவிரமாக மேற்கொள்ளும் வரை தொகுதிகளின் எண்ணிக்கை இப்படியே தொடர வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவாதம் நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.