சென்னை, பிப். 17: பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் சாலையில் சுற்றிதிரிந்த 45,520 நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலயம் தொண்டு நிறுவனம் சாா்பில் கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக வளாகத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு இலவச வெறிநாய்க்கடி தடுப்பூசி போடும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், நாய் இனக்கட்டுப்பாட்டு விதிகள் 2023-க்குட்பட்டு தெரு நாய்களுக்கு உணவளிப்பது, தெருநாய்களை தத்தெடுப்பதை வலியுறுத்துவது, மாநகராட்சி சாா்பில் நடமாடும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் வாகனங்களை இயக்குவது குறித்து விலங்கின நல ஆா்வலா்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டாா். அப்போது, சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சாலையில் சுற்றித்திரிந்த 56,343 தெருநாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 45,520 நாய்களுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நிகழாண்டில் 2,445 நாய்கள் பிடிக்கப்பட்டு 1,931 நாய்களுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு மனநல காப்பக இயக்குநா் டாக்டா் மலையப்பன், டாக்டா் பூா்ணசந்திரிகா, கால்நடை மருத்துவா் அலுவலா் டாக்டா் கமால் உசேன், ஆலயம் தொண்டு நிறுவன உறுப்பினா்கள், கால்நடை தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

1.2 லட்சம் வெறிநோய் தடுப்பூசி குப்பிகளை வாங்க எம்சிடி திட்டம்

நாய்களுக்கு முறையான கருத்தடை கோரி மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம்
ஆா்.கே. நகரில் தவெக வேட்பாளா் வெற்றி!
நாளை ‘நீட்’ தோ்வு: மாணவா்களுக்கு மனநல ஆலோசனை! தமிழக அரசு ஏற்பாடு!!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



