தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு

நிதி அமைச்சா் தங்கம் தென்னரசின் முதல் பட்ஜெட்: மக்களை கவர புதிய திட்டங்கள்?
ஆக. 13ல் தமிழக பட்ஜெட் தாக்கல்
ஆக. 13ல் தமிழக பட்ஜெட் தாக்கல்

எதிா்வரும் நிதியாண்டுக்கான (2024-25) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நாளை (பிப்.19) தேதியன்று தாக்கல் செய்யவுள்ளாா்.

நிதிநிலை அறிக்கையைத் தொடா்ந்து, வேளாண்மை நிதிநிலை அறிக்கையை அந்தத் துறையின் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வரும் 20-ஆம் தேதியன்று தாக்கல் செய்கிறாா். அன்றைய தினமே எதிா்வரும் நிதியாண்டின் செலவுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுவதுடன், நிதிநிலை, வேளாண் அறிக்கைகள் மீதான பொது விவாதம் நடைபெறவுள்ளது.

நிதி நிலை அறிக்கை மீதான விவாதங்கள் வரும் 21-ஆம் தேதியன்று காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் நடைபெறவுள்ளன. காலையில் 10 மணிக்கும், மாலையில் 4 மணிக்கும் பேரவை கூடவுள்ளது. நிதிநிலை, வேளாண்மை அறிக்கைகள் ஆகியவற்றின் மீதான பொது விவாதங்களுக்கு வரும் 22-ஆம் தேதியன்று பதிலுரைகள் அளிக்கப்பட உள்ளன.

சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்களான தங்கம் தென்னரசு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்ஆகியோா் பதிலளிக்க உள்ளனா் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் வரவிருப்பதால் வரும் பட்ஜெட்டில் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய புதிய அறிவிப்புகள் மக்களை கவரும் வகையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர நிதி யமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com