அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆதிதிராவிடர் - பழங்குடியினருக்கு 120 சமூகக் கூடங்கள் அமைக்கப்படும்!

பழங்குடியினர் வாழ்விடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும், தொல்குடி என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

News image
Updated On :19 பிப்ரவரி 2024, 7:52 am

DIN

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்குத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். நிதியமைச்சராகத் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

அவரது உரையில்,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்த தொழில் முனைவோர்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தில் மூலம் 755 நபர்கள் ரூ.84 கோடி மானியத்துடன் கூடிய ரூ.156 கோடி கடன் வசதி பெற்றுப் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்திற்குக் கிடைத்த வரவேற்பினைக் கருதி, திருத்த மதிப்பீடுகளில் கூடுதலாக ரூ.78 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வரும் 2024-25 ஆண்டிற்கான வரசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்காக ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். CM Arise என்ற புதிய திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்கு 35 சதவீத வட்டி மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில்முனைவோர் கடன் பெறலாம். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வரும் ஆண்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படும்.

நகர்ப்புற பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும், ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் முழுமையான சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.230 கோடி நிதி ஒதுக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பயன்பெறும் வகையில் திருமணக் கூடும், உள்விளையாட்டுக் கூடும், கற்றல் மற்றும் பயிற்சி மையம் போன்ற வசதிகள் கொண்ட 120 சமூகக் கூடங்கள் சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

பழங்குடியினர் வாழ்விடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும், தொல்குடி என்ற புதிய திட்டம் அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.