இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்க நிதி!

வறண்ட நிலங்களில் தோட்டக்கலையை மேம்படுத்த ரூ.3.64 கோடி ஒதுக்கீடு.
இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்க நிதி!
Published on
Updated on
1 min read

பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்க 100 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் இதற்காக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று (பிப். 20) தாக்கல் செய்து வருகிறார்.

இதில், இளைஞர்களை வேளாண் தொழிலில் ஈடுபடுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார். இளைய தலைமுறையினரை வேளாண் தொழிலில் நாட்டம் கொள்ளச் செய்வதற்காக நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

வேளாண் பட்ஜெட்டில், சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதி திராவிடர் பழங்குடி விவசாயிகளுக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர், செய்யாறு, வேலூர், சேலம் உள்ளிட்ட சர்க்கரை ஆலைகளை தானியங்கி மையமாக்க ரூ.3.6 கோடி நிதி ஒதுக்கீடு.

வறண்ட நிலங்களில் தோட்டக்கலையை மேம்படுத்த ரூ.3.64 கோடி ஒதுக்கீடு.

பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலைகளை மேம்படுத்த ரூ.12.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com