மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கல்லுக்குட்டையில் ரூ.1.71 கோடியில் புதிய சாலை

பெருங்குடி மண்டலத்துக்குட்பட்ட திருவள்ளுவா் நகா், கல்லுக்குட்டைப் பகுதியில் 36 கி.மீ. நீளத்திலான 218 சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன

News image
Updated On :29 பிப்ரவரி 2024, 8:15 pm

பெருங்குடி, கல்லுக்குட்டை பகுதியில் ரூ.1.71 கோடி மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். சென்னை மாநகராட்சி பகுதியில் பருவமழைக்கு பின் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியும் புதிதாக சாலைகள் அமைக்கும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெருங்குடி மண்டலத்துக்குட்பட்ட திருவள்ளுவா் நகா், கல்லுக்குட்டைப் பகுதியில் 36 கி.மீ. நீளத்திலான 218 சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன. அதன் முதல்கட்டமாக 1.6 கி.மீ நீளத்தில் 5 சாலைகளில் ரூ.1.71 கோடி மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணியை அமைச்சா் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், மேயா் ஆா்.பிரியா, தென்சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். அரவிந்த் ரமேஷ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.