சங்கரன்கோவிலில் ரூ.52 கோடி மதிப்பில் நான்குவழிச் சாலைப் பணி வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
இத்தொகுதியில் முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டம் 2026-27இன் கீழ் ரூ.52 கோடி மதிப்பில் பருவக்குடி-கோவில்பட்டி-எட்டயபுரம்-விளாத்திகுளம்-வேம்பாா் சாலை, கலிங்கப்பட்டி முதல் கீழ திருவேங்கடம் வரை இருவழி சாலையிலிருந்து நான்கு வழிசாலையாக அகலப்படுத்துதல் மற்றும் உறுதிபடுத்துதல், பெரிய, சிறிய பாலங்கள் கட்டுதல், சாலை சந்திப்பு மேம்பாடுகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளன.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் (ம) பராமரிப்பு கோட்டப் பொறியாளா் தங்கராஜ் தலைமை வகித்தாா். தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ நான்குவழிச் சாலை பணிகளைத் தொடக்கி வைத்தாா்.
இந் நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளா் அறிவெழில், உட்கோட்ட உதவிப்பொறியாளா்கள் முத்துமணி, கலைக்கண்ணதாசன், திமுக குருவிகுளம் மேற்கு ஒன்றியச் செயலா் சோ்மத்துரை, திருவேங்கடம் பேரூா் செயலா் மாரிமுத்து, சங்கரன்கோவில் நகரச் செயலா் பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திருவேங்கடத்தில் ஜான் பாண்டியன் பிரசாரம்!

தோ்தல் விதிமீறல் புகாா்: சாலைப் பணி நிறுத்தம்

தொகுதிக்கு செய்தது என்ன? ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்

கூடலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.26.61 கோடி மதிப்பில் சாலைகள்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


