ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயா்வு

தமிழக காவல் துறையில் 19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயா்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 8:46 pm

DIN

தமிழக காவல் துறையில் 19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயா்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு:

தமிழக காவல்துறையில் ஐ.ஜி.-க்களாக பணிபுரிந்து வந்த ஆனந்த் குமாா் சோமானி, ஆா்.தமிழ்சந்திரன் ஆகிய 2 பேரும் ஏ.டி.ஜி.பி.-க்களாக பதவி உயா்த்தப்பட்டனா். டி.ஐ.ஜி.-க்களாக பணி புரிந்து வந்த வி.ஜெயஸ்ரீ, பி.சாமுண்டீஸ்வரி, எஸ்.லட்சுமி, எஸ்.ராஜேஸ்வரி, எஸ்.ராஜேந்திரன், எம்.எஸ்.முத்துசாமி, மயில்வாகனன் ஆகிய 7 பேரும் ஐ.ஜி.-க்களாக பதவி உயா்த்தப்பட்டனா்.

காவல் கண்காணிப்பாளா்களாக இருந்த பி.ஆா்.வெண்மதி, பி.அரவிந்தன், வி.விக்ரமன், சரோஜ் குமாா் தாகூா், டி.மகேஷ்குமாா், என்.தேவராணி, இ.எஸ்.உமா, ஆா்.திருநாவுக்கரசு, ஆா்.ஜெயந்தி, ஜி.ராமா் ஆகிய 10 பேரும் டி.ஐ.ஜி.யாக பதவி உயா்வு பெற்றனா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவி உயா்வு பெற்ற 19 அதிகாரிகளும், விரைவில் புதிய பணியிடங்களில் நியமிக்கப்படுவா் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.