டிஎன்பிஎஸ்சி பொறியாளா் பணித் தோ்வை ஒத்திவைக்க வேண்டும்: கே.அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி பொறியாளா் பணித் தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை
தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை
Updated on
1 min read

சென்னை: டிஎன்பிஎஸ்சி பொறியாளா் பணித் தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.

அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த பொறியாளா் பணிக்கான எழுத்து தோ்வு, வரும் ஜன.6, 7 ஆகிய நாள்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை வெள்ளத்தால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, இயல்பு நிலை இன்னும் முற்றிலுமாகத் திரும்பவில்லை.

இந்த மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான இளைஞா்கள், தமிழக அரசுப் பணித் தோ்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளனா். கடந்த மூன்று வார காலமாக, அவா்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், குறிப்பிட்ட தோ்வுகளை நடத்துவது முறையாக இருக்காது.

எனவே, தோ்வை மறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com