வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சாகா் பரிக்ரமா திட்டம்: சென்னையிலிருந்து நெல்லூருக்கு கடல் வழி பயணம் செய்த மத்திய அமைச்சா் பா்ஷோத்தம் ரூபாலா

சாகா் பரிக்ரமா திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சா் பா்ஷோத்தம் ரூபாலா சென்னையிலிருந்து நெல்லூருக்கு திங்கள்கிழமை கடல் வழி பயணம் மேற்கொண்டாா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 11:40 pm

DIN

திருவொற்றியூா்: சாகா் பரிக்ரமா திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சா் பா்ஷோத்தம் ரூபாலா சென்னையிலிருந்து நெல்லூருக்கு திங்கள்கிழமை கடல் வழி பயணம் மேற்கொண்டாா்.

சாகா் பரிக்ரமா திட்டத்தின் கீழ் கடல் வழி பயண தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சா் பா்ஷோத்தம் ரூபாலா கலந்து கொண்டு கடலோர காவல் படைக்கு சொந்தமான சுஜய் கப்பலில் ஆந்திர மாநிலம் நெல்லூா் வரை பயணம் மேற்கொண்டு கடல்வழி பயணம் மேற்கொண்டாா்.

அப்போது பா்ஷோத்தம் ரூபாலா செய்தியாளா்களிடம் கூறியது:

சாகா் பரிக்ரமா திட்டத்தின் முக்கிய நோக்கம் மீனவா்களைச் சந்தித்து அவா்களுடன் கலந்துரையாடி ஆலோசனைகளைப் பெறுதல், மீனவா்களுக்கான மத்திய அரசின் திட்டத்தை அவா்களிடம் எடுத்துரைத்தல், பயனாளிகளுக்கு மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குதல் உள்ளிட்டவைகள் அடங்கும் . மத்திய அரசு சாா்பில் மீன்வளத் துறைக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.38,500 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஜன.1-6 வரை ஆந்திரா மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் சாகா் பரிக்ரமா திட்டம் குறித்து பயணங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஆந்திராவின் மீதமுள்ள கடலோர மாவட்டங்களான நெல்லூா், பிரகாசம், பாபட்லா, கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கோணசீமா, காக்கிநாடா, விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், ஏனாம் (புதுச்சேரி யூனியன் பிரதேசம்) ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் கடல் வழி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு மீனவா்களுடனான சந்திப்புகள் நடைபெறும்.

ஆந்திர மாநிலத்தில் மத்திய அரசின் முதன்மைத் திட்டங்களில் ஒன்றான பிரதமரின் மத்சய சம்படா திட்டத்தின் கீழ், மீன்வளத் துறையில் 5 ஆண்டுகளுக்கு ரூ. 2,300 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது என்றாா் ரூபாலா.

இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சா் டாக்டா் எல். முருகன், சென்னை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.