நிவாரண உதவி பெற நாளை வரை மட்டுமே அவகாசம்: நெல்லை ஆட்சியர் 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவி பெற நாளை (ஜன. 3) வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக நெல்லை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவி பெற நாளை (ஜன. 3) வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக நெல்லை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 92% குடும்ப அட்டை தாரர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரண உதவியை வழங்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, அதிகம் பாதித்த பகுதிகளில் தலா ரூ.6000, பிற பகுதிகளுக்கு தலா ரூ.1000 வழங்கப்படுகிறது. இதற்காக ரூ. 220 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குடும்ப அட்டை கேட்டு புதிதாக விண்ணப்பித்துள்ளவா்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாகவும், வேறு பகுதிகளில் இருந்து தற்காலிகமாக தங்கியிருந்து மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com