மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் 123-ஆம் ஆண்டு திருவிழாவில் வியாழக்கிழமை 7-ஆம் நாள் வளைகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் மண்ணச்சநல்லூர் வணிக வைசிய சங்கம் சார்பில் நடத்தப்படும் 123-ஆம் ஆண்டு திருவிழா டிச.28 -ஆம் தேதி கம்பம் நடுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க | கிளாம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு!
விழாவின் 7-ஆம் நாளான வியாழக்கிழமை அம்மனுக்கு வளையல்களால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து அலங்கார தீபாரதனை மற்றும் அபிஷேக தீபாரதனை நடைபெற்றது.
இந்த திருவிழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.