தமிழ்நாட்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு சாட்ஜிபிடி அளித்துள்ள பதிலை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 சென்னை நந்தம்பாக்கத்தில் கடந்த இரு நாள்களாக (ஜன.7, 8) நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் பங்கேற்றார். அப்போது பேசிய ஆனந்த் மஹிந்திரா, தமிழ்நாட்டில் முதலீடு செய்வது சிறந்தது ஏன்? என்ற கேள்வியை சாட் ஜிபிடியிடம் எழுப்பினேன். அது வியக்கத்தக்க பதிலை அளித்தது. தமிழ்நாட்டில் வலுவான உள்கட்டமைப்பு, திறமைமிக்க ஊழியர்கள், மேம்பட்ட துறைமுகங்கள், சிறந்த கல்விமுறை மற்றும் அரசு ஆதரவு உள்ளிட்ட காரணங்களை சாட்ஜிபிடி குறிப்பிட்டதாக சுட்டிக்காட்டினார்.
இங்கே மேடையில் பேசுவதற்கு சாட்ஜிபிடியால் வரைவு செய்யப்பட்ட ஒரு முழுமையான உரையை நான் பெற்றிருக்க முடியும். பொதுவாக நான் செய்யறிவு இயந்திரங்களை விட மனிதர்களின் அறிவு மற்றும் அனுபவத்தின் மீது அதிகம் நம்பிக்கை கொண்டவன். உங்கள் சுய அனுபவத்தை நீங்கள் நம்பினால், வேறுவகையான உரையை உங்களால் கொடுக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில் நிலைய குப்பை கிடங்கில் தீ விபத்து
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏப்.18 வரை மழைக்கு வாய்ப்பு!

பெயா் குழப்பம்! 85 வயது முதியவருக்கு பதிலாக மற்றொரு நபரிடம் தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்!

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


