வாணியம்பாடி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தான்.
தமிழகத்தில் பருவகால நோய்களான டெங்கு காய்ச்சல் கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவி வருகின்றன.
இந்த நிலையில், வாணியம்பாடிக்கு அருகே அரசுப் பள்ளியில் பயின்றுவந்த 8-ஆம் வகுப்பு மாணவர் கோபிநாத் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து, மாணவர் கோபிநாத் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.