கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பொதுவேலை நிறுத்தம்: எஸ்ஆர்எம்யூ
திருச்சி : கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பொது வேலை நிறுத்தம் செய்யப்படும் என்று எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலாளர் கண்ணையா அறிவித்துள்ளார்.
கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என திருச்சியில் நடந்த போராட்டத்தில், எஸ்ஆர்எம்யு பொதுச் செயலாளர் என். கண்ணையா தெரிவித்துள்ளார்.
திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு, எஸ்.ஆர்.எம்.யூ., ரயில்வே தொழிற்சங்கம் சார்பில், மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ரயில் நிலையங்களை தனியார்மயமாக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க.. மகனைக் கொன்ற இளம்பெண் தொழிலதிபர்: காட்டிக்கொடுத்த ரத்தக் கரை
இதில், எஸ்.ஆர்.எம்.யூ சங்கப் பொதுச்செயலாளர் என். கண்ணையா, மாநில துணை பொதுச் செயலாளர் எஸ். வீரசேகரன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்வின் போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது, "இந்த உண்ணாவிரத போராட்டம் எந்தவித அரசியல் நோக்கத்திற்காகவும் நடத்தப்படவில்லை, மக்களின் நலனுக்காகவும், மத்திய அரசு ஊழியர்களின் நலனுக்காகவும் தான் நடத்தப்படுகிறது.
மத்திய அரசு உரிய தீர்வு காணவில்லை என்றால் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்" என்றார் அவர்.