ஜன.15-ல் வடகிழக்குப் பருவமழை விலக வாய்ப்பு!

வடகிழக்குப் பருவமழை ஜனவரி 15-இல் விலகுவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
ஜன.15-ல் வடகிழக்குப் பருவமழை விலக வாய்ப்பு
ஜன.15-ல் வடகிழக்குப் பருவமழை விலக வாய்ப்பு
Published on
Updated on
1 min read

வடகிழக்குப் பருவமழை ஜனவரி 15-இல் விலகுவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு இயல்பை விட 4 சதவீதம் அதிகமாகப் பதிவாகியுள்ளது. 

அக்டோபர் 1-ல் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, இந்தாண்டு பல்வேறு  மாவட்டங்களிலும் நல்ல மழைபொழிவை ஏற்படுத்தியுள்ளது. 

வடகிழக்குப் பருவமழை ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி பருவமழை தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் உள்ளிட்ட சில இடங்களில் மழை நீடித்து வருகின்றது. 

இந்த நிலையில், தென் இந்தியப் பகுதிகளில் ஜன.15இல் வடகிழக்குப் பருவமழை நிறைவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com