பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் நலன் கருதி மாதாந்திர பேருந்து பயண அட்டையை புதுப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாநகரப் பேருந்துகளில் விருப்பம் போல் பயணம் செய்யும் 1000 ரூபாய் மாதாந்திர சலுகை பயண அட்டை வழங்கப்படும் கால அவகாசமானது ஜன. 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநகரப் பேருந்து போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், ஒவ்வொரு மாதமும் விரும்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகை பயண அட்டையானது (ரூ.1000/-), (7-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக மாதாந்திர சலுகை பயண அட்டை(MST), மாணவர் சலுகை பயண அட்டை (SCT) மற்றும் ரூ.1000 மதிப்பிலான TAYPT பயண அட்டையின் விற்பனை ஜன. 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.