கம்பம்: வெள்ளிக்கிழமை முதல் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டிலை திருப்பி கொடுத்தால் ரூ.10 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் ஏராளமான அரசு மதுபான கடைகள் உள்ளன. இங்கு தற்போது மதுபான கூடங்கள் ஏலம் விடப்பட்டு பல ஆண்டுகளுக்கு பின் இயங்கி வருகிறது. இந்த நிலையில் பசுமை மாவட்டமாக தேனி மாவட்டம் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க.. அயோத்தி ராமர் கோயிலில் மோடியின் பங்களிப்பு ஸீரோ: சுப்ரமணியன் சுவாமி
இதனால் மதுபான பாட்டில்களால் வயல்வெளி, ஆறு, வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் மாசு ஏற்படாமலிருக்க அரசு மதுபான கடைகளில் மதுபாட்டிலை வாங்கி காலி பாட்டிலை திரும்பக் கொடுத்தால் ரூ.10 அந்த நுகர்வோருக்கு வழங்க அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, தேனி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. மதுப்பிரியர்கள் பாட்டில்களை திரும்ப கொடுத்து 10 ரூபாயை மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.