6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காலி மதுபாட்டிலுக்கு 10 ரூபாய்: ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும்

ஒரு மாவட்டத்தில் மட்டும் அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டிலை திருப்பி கொடுத்தால் ரூ.10 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஜனவரி 2024, 10:19 am

DIN


கம்பம்: வெள்ளிக்கிழமை முதல் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டிலை திருப்பி கொடுத்தால் ரூ.10 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஏராளமான அரசு மதுபான கடைகள் உள்ளன. இங்கு தற்போது மதுபான கூடங்கள் ஏலம் விடப்பட்டு பல ஆண்டுகளுக்கு பின் இயங்கி வருகிறது. இந்த நிலையில் பசுமை மாவட்டமாக தேனி மாவட்டம் அறிவிக்கப்பட்டது. 

இதனால் மதுபான பாட்டில்களால் வயல்வெளி, ஆறு,  வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் மாசு ஏற்படாமலிருக்க அரசு மதுபான கடைகளில் மதுபாட்டிலை வாங்கி காலி பாட்டிலை திரும்பக் கொடுத்தால் ரூ.10 அந்த நுகர்வோருக்கு வழங்க அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, தேனி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. மதுப்பிரியர்கள் பாட்டில்களை திரும்ப கொடுத்து 10 ரூபாயை மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.