தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலில் பிரதமர் சிறப்பு வழிபாடு

தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராமர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர், சிறப்பு பூஜைகளையும் பிரதமர் மேற்கொண்டார்.
தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலில் பிரதமர் சிறப்பு வழிபாடு

தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராமர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர், சிறப்பு பூஜைகளையும் அவர் மேற்கொண்டார்.

பின்னா், ராமேசுவரத்திலிருந்து ஹெலிகாப்டா் மூலம் புறப்பட்டு, மதுரை விமான நிலையத்துக்கு நண்பகல் 12 மணிக்கு சென்றடைந்தார். இதையடுத்து, மதுரையிலிருந்து பகல் 12.35 மணிக்கு தனி விமானத்தில் தில்லி புறப்பட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அரிச்சல் முனைக்கு சென்றார். அங்குள்ள கடற்கரையில் அமர்ந்து  தியாணம் செய்தார். பின்னர், அரிச்சல் முனையில் உள்ள தூணிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை மாலை சென்னை வருகைதந்த பிரதமா் மோடி, அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் தில்லி புறப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com