திருவண்ணாமலை கிரிவலம்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஜன. 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சென்னை-திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை-திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

பக்தர்களின் வசதிக்காக ஜன. 24 மற்றும் ஜன. 25 ஆகிய நாள்களில் திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரம் - திருவண்ணாமலை, புதுச்சேரி - திருவண்ணாமலை, கடலூர்/பண்ருட்டி, திருக்கோவிலுர், கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை, வேலூர் - திருவண்ணாமலை, திருப்பத்தூர் - திருவண்ணாமலை, ஆரணி/ஆற்காடு - திருவண்ணாமலை, காஞ்சிபுரம் - திருவண்ணாமலை வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குடியரசு நாள், தைப்பூசம் என தொடர் விடுமுறை நாள்கள் வருவதால் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com